தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு - அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு - அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசின் முடிவு என்ன?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி முன்னதாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மறுபரிசீலனை:

தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் கல்வி ஸ்மார்ட்போன் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. மற்ற அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சியை கொண்டு வந்ததது. இதன் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவே தினசரி நடத்தப்பட்டு வந்தது.

SBI வங்கியில் 35 காலிப்பணியிடங்கள் – மே 17 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதன் பிறகு அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் கட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் சென்றதை அடுத்து மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. காலை, மாலை என இரு நேரங்களில் தேர்வு நடைபெறுவதால் சிறு குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் சிக்கலை எதிர்கொள்வர். மேலும் சத்துணவு உண்ணும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!