ரயில் பயணம் செய்ய திட்டமிடும் பயணிகளின் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!
கோடைகால விடுமுறையின் காரணமாக கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே கோயம்புத்தூர், ராமேஸ்வரம், குருவாயூர் ,திருவனந்தபுரம் போன்ற விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை 2 வருடமாக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. கோடை காலம் என்றாலே மக்கள் அனைவரும் சுற்றுலா செல்வது வழக்கம். அதுவும் அதிகமான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவர். மக்கள் வசதிகளுக்கு ஏற்ப பல வசதிகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி,கோடைகால நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே கோயம்புத்தூர் முதல் நாகர்கோவில் விரைவு ரயில் (22668) மற்றும் திருவனந்தபுரம் முதல் மதுரை அமிர்தா விரைவு ரயில் (16343) ஆகியவற்றில் ஏப்ரல் 21 முதல் மே 31 வரையும், நாகர்கோவில் முதல் கோயம்புத்தூர் விரைவு ரயிலில் (22667) ஏப்ரல் 22 முதல் ஜூன் 1 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!
மேலும்,தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் விரைவு ரயில் (16851) மற்றும் மதுரை முதல் திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஆகியவற்றில் ஏப்ரல் 21 முதல் ஜூன் 1 வரையும் ராமேஸ்வரம் முதல் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (16852) ஏப்ரல் 21 முதல் ஜூன் 3 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.