பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!
பலரும் எதிர்பார்த்த, பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி மே 8ல் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில், யார் யார் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க இருக்கிறார்கள் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ஜோடிகள்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. பிக் பாஸ் 5 சீசன்களை கடந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியும் நடத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
போன பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் மற்றும் சோம் சேகர், கேப்ரியல்லா சார்ல்டன் மற்றும் அஜீத் காலிக், வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஹாசன், அறந்தாங்கி நிஷா மற்றும் தாடி பாலாஜி, சம்யுக்தா கார்த்திக் மற்றும் ஜித்தன் ரமேஷ், பாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்யா, ஜூலி மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் ஜோடியாக கலந்து கொண்டனர். இவர்களில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஹாசன் ஜோடி தான் முதல் பரிசை பெற்று மூன்று லட்ச ரூபாய் பரிசு தொகையையும் தட்டி சென்றனர்.
பாரதியை வெறுப்பதாக கூறும் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பம்!
தற்போது மீண்டும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மே 8 ல் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தடவை பாவ்னி மற்றும் அமீர், வேல்முருகன் மற்றும் இசை வாணி, ஹாரதி மற்றும் கணேஷ், அபிஷேக் மற்றும் சுருதி, சுஜா மற்றும் சிவகுமார், தாமரை மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் ஜோடிகளாக பங்கேற்கவுள்ளனர். மேலும், கடந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் போலவே இந்தாண்டும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். மேலும், இன்னொரு நடுவர் யார் என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.