தமிழகத்தில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அறிவிப்பு – வலுக்கும் முக்கிய கோரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் விதிகளை மாற்றியமைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
RTE:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர பல நிபந்தனைகள் உள்ளது. அதன்படி பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அவர்கள் தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான RTE மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. மே மாதம் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாதம் முதல் சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்த பலர் வருமானத்தை குறைவாக காட்டி குழந்தைகளை பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் தகுதியான ஏழை குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. இந்த குறைபாடுகளை களைத்து, தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைகளை அரசு மாற்ற வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.