இந்த மாதம் முதல் சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை 19 கிலோ சிலிண்டருக்கு ரூ.104 உயர்த்தப்பட்டுள்ளது என்று எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன.
சிலிண்டர் விலை
சமையல் எரிவாயுவின் விலை அனைத்து நாடுகளிலும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக பங்கு சந்தை அதிகமாக சரிவடைந்துள்ளது. அந்த நாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் கேஸின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் தாக்கமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மக்களை கவலை அடைய செய்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாமாயில் தட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயமும் எழுந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் சிலிண்டர் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post Officeல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை! முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் டெல்லியில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.949.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.965.50க்கும், மும்பையில் ரூ.949.50க்கும் கொல்கத்தாவில் ரூ.976க்கும் 14.2 கிலோ சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. கமர்சியல் சிலிண்டர் விலை உயர்வு போலவே ஜெட் விமான எரிபொருள் விலையும் நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து விமான போக்குவரத்து சேவை கட்டணம் உயரும் அபாயம் எழுந்துள்ளது.