தமிழகத்தில் இன்று முதல் மே 3ம் தேதி வரை விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை மே 3ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அதனால் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மே 2ம் தேதியும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகை
தமிழகத்தில் இஸ்லாமியர்களின் நாட்காட்டியின்படி வருகிற மே 3ம் தேதி அன்று ரம்ஜான் தினம் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக ரம்ஜான் மாதத்தில் வரக்கூடிய 3ம் பிறை அன்று ரம்ஜான் தினம் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். அதனால் இந்த நாளில் ஏழை, எளியோருக்கு உணவை பகிர்வதும், அத்துடன் இல்லாதவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவார்கள். அதனால் இத்தினத்தை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாட மே 3ம் தேதி அன்று அரசு விடுமுறை அளித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் இன்றும் (ஏப்.30) நாளையும் (மே .1) சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுவில் மே 2ம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கோடை காலம் என்பதால் பொதுமக்கள் தொடர் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வார்கள். இதற்கும் தற்போது தடை ஏற்படுவதால் மே 2ம் தேதியும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!
மேலும் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, தமிழகத்தில் ஏப்.30, மே 1, மே 3ம் தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 2ம் தேதியும் விடுமுறை அளித்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால் மக்களும் மகிழ்ச்சியாக சொந்த ஊர்களுக்கு செல்வது அல்லது சுற்றுலா சென்று மகிழ்வார்கள் என்று கூறியுள்ளார். அதனால் அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.