உலக சாதனை செய்யப்போகும் பாக்கியா, மட்டம் தட்டிய கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடுத்தரக் குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. கோபி பாக்கியாவை மட்டம் தட்டிக் கொண்டே இருக்க ஆனால் பாக்கியா கோபி மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் பாக்கியா உலக சாதனை படைக்க இருக்க அதற்கு கோபி கிண்டல் செய்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் கதை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி ஏமாற்றுவது மட்டுமல்லாமல் ராதிகாவையும் ஏமாற்றி வருகிறார். ஆனால் கோபி பற்றி உண்மை எதுவும் பாக்கியாவிற்கு தெரியாமல் இருக்கிறது. இது பற்றி எல்லாம் தெரிந்தது கோபியின் தந்தை ராமமூர்த்தி தான். ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதால் அவரால் உண்மையை சொல்ல முடியவில்லை, அடுத்ததாக உண்மை தெரிந்தது கோபியின் இரண்டாவது மகன் எழில்.
நான்கு முறை காதல் தோல்வி, KPY பாலா வாழ்க்கையில் நடந்த சோகம் – ரசிகர்கள் உருக்கம்!
ஆனால் அம்மா அதை தாங்கி கொள்ள மாட்டார் என்பதால் அவர் எதுவும் சொல்லவில்லை. அடுத்து செல்வி ஒரு முறை கோபியை பார்த்தாலும் செல்வி சொல்வதை பாக்கியா நம்பவில்லை. இந்நிலையில் கோபியின் ஆட்டம் உச்சத்திற்கு சென்று இருக்கிறது. கோபி பாக்கியாவிற்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிவிட்டார். ஆனால் அதை எல்லாம் அறியாமல் இன்னும் கோபி பேச்சை முழுமையாக பாக்கியா கேட்டு வருகிறார். பாக்கியாவை தொழில் செய்ய வேண்டாம் என சொல்ல ஆனால் மீண்டும் ராதிகா சொன்னதால் கோபி தொழிலை தொடங்க சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
தொழிலில் முன்னேற்றம் காண எழில் ஒரு ஐடியா சொல்கிறார். அதன் படி ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து உலக சாதனை படைக்கலாம் என எழில் சொல்ல பாக்கியா சரி என சொல்கிறார் ஜெனி செல்வி துணையாக இருக்க எப்படி செய்யலாம் என பாக்கியா திட்டமிடுகிறார். இந்த விஷயம் கோபிக்கு தெரியவர அவர் பாக்கியாவை நக்கலடிக்கிறார். அதனால் கோவப்பட்ட பாக்கியா நான் உலக சாதனை செய்வேன் என சவால் விடுகிறார்.