தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுரைகள்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்பு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கான தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மற்றும் எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார். ஏற்கனவே மாணவர்களுக்கு தேர்வை எழுவதற்கான அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.