1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஒடிசா மாநிலத்தில் மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதனால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
மே 6 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு மே (கோடை காலம்) மாதம் முழுவதும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்படும்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த ஆண்டு குறைவான நாட்களே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று உள்ளதால் இன்னும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்தியாவில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாநில பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் தேர்வுகள் ஏதேனும் இந்த தினங்களில் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.