மே 6 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்காக மே 6 ஆம் தேதி மூடப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ் குமார் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
கோடை விடுமுறை:
தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கோடை விடுமுறைக்காக பள்ளிகள் அனைத்தும் மே 6ஆம் தேதி மூடப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூலை 4ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தவிர மே 4ஆம் தேதிக்குள், 2021-22ஆம் கல்வியாண்டுக்கான அனைத்துத் தேர்வுகளையும் முடிக்க வேண்டும் என்றும் அடிப்படை ஆங்கில மதிப்பீடு மட்டும் மே 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு!
இப்போது தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பீடுகளை நிறைவுசெய்து அடுத்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கையை ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் கீழுள்ள பாடசாலைகள் மே 20 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஆந்திர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், ஏப்ரல் 4 முதல், 1 லிருந்து 9 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு அரை நாள் மட்டுமே பள்ளியை நடத்த அரசு முடிவு செய்தது.
ExamsDaily Mobile App Download
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி முதல் பள்ளிகள் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே திறந்திருந்தது. மறுபுறம், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலைப் பள்ளி சான்றிதழ் (SSC) தேர்வுகள் அல்லது போர்டு தேர்வுகள் ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்குவதால், அவர்கள் மட்டும் கூடுதல் படிப்பு நேரங்களுடன் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இம்மாநிலத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 24ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மே 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.