அரசு ஊழியர்களுக்கு மே 1 முதல் 9 நாட்கள் விடுமுறை – அரசின் அதிரடி உத்தரவு!
புனித ரமலான் மாதம் தொடங்கி, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் ரம்ஜான்(ஈத் அல் பித்ர் ) மே 2ம் தேதி அல்லது 3ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஈத் அல் பித்ர் விடுமுறைகள் மே 1 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி முடிவடையும் என்று குவைத் நாட்டு அரசு அறிவித்து உள்ளது. அதாவது அந்த நாட்டு அரசு ஊழியர்களுக்கு 9 நாட்களுக்கு பொது விடுமுறை ஆகும்.
அதிரடி உத்தரவு:
நடப்பு மாதத்தில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அதிகமான பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் வர உள்ள மே மாதத்தில் பண்டிகை காரணமாக சுமார் 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஈத் அல் பித்ர் பண்டிகை வெகு சிறப்பாக வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது
விக்ரம் தான் தன்னுடைய அப்பா என்பதை அறிந்து கொள்ளும் பாரதி – அதிர்ச்சியில் சவுந்தர்யா! ப்ரோமோ ரிலீஸ்!
இந்த பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களை விட இம்முறை 9 நாட்களுக்கு அளிக்கப்படும் என குவைத் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான குவைத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகையானது மே 1 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி முடிவடையும் என்று குவைத்தின் சிவில் சர்வீஸ் கமிஷன் (சிஎஸ்சி) அறிவித்துள்ளது. இப்போது பண்டிகை விடுமுறையாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு மே 7ம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மே 8 ஆம் தேதி முதல் அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்குவார்கள் என்று CSC தெரிவித்துள்ளது.
இது தவிர ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் சிறப்பு வேலை நேரங்களைக் கொண்ட மாநில அதிகாரிகள் தங்கள் பணி நேரத்தை பொது நலனுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் குவைத்தில் உள்ள நிபுணர்கள் மற்றும் வானியல் மையங்கள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பை நிறைவு செய்யும் என்றும், ஈத் அல் பித்ரின் முதல் நாள் மே 2ஆம் தேதி என்றும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.