விக்ரம் தான் தன்னுடைய அப்பா என்பதை அறிந்து கொள்ளும் பாரதி – அதிர்ச்சியில் சவுந்தர்யா! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்வாரா இல்லையா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் விக்ரம் தான் தன்னுடைய அப்பா என்பதை பாரதி அறிந்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை விட்டு பாரதி பிரிந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை ஆகியும் பாரதிக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணம்மா மீதுதான் தவறு இருக்கிறது என 10 ஆண்டுகளாக நினைத்து கண்ணம்மாவை வெறுத்துக் கொண்டிருக்கிறார்.
TNPSC Group 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 4 நாட்களே கால அவகாசம்!
எப்போதுதான் பாரதிக்கு கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறைந்து ஹேமாவும் லட்சுமியும் தன்னுடைய குழந்தைகள் தான் என்பதை அறிந்துகொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் புதிதாக ஷர்மிளா மற்றும் விக்ரம் என இரண்டு கதாபாத்திரங்கள் அறிமுகமாகியுள்ளன. அதாவது விக்ரம் என்பவர் சௌந்தர்யாவின் கல்லூரி நண்பன். ஷர்மிளா என்பவர் வெண்பாவின் அம்மா.
வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் அவர் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது ஷர்மிளாவின் வெண்பாவிடம் நீ பாரதியை விட்டு விலகி வரவேண்டும். நான் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மிரட்டிக் கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பாரதி, வேணு அப்பாவிற்கும் சௌந்தர்யாவிற்கும் பிறந்த குழந்தையே இல்லை. விக்ரமிற்கும் சௌந்தர்யாவிற்கும் பிறந்த குழந்தை தான் எனவும் அந்த விஷயத்தை பாரதி அறிந்து கொள்வது போலவும் சீரியல் வேறுவிதத்தில் செல்ல இருக்கிறது.