TNPSC Group 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 4 நாட்களே கால அவகாசம்!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரூப்4&VAO:
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப 2022ம் ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்தது.
இந்தியாவில் பென்ஷன் பெறுபவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி உயர்வு!
அதன்படி தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்4&VAO தேர்வுகான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வெளியானது.
அதில் குரூப்4 தேர்வின் கீழ் 7,301 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இவை தேர்வின் மூலம் நிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இன்று வரை சுமார் 7.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.