தமிழகத்தில் கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவியருக்கான முக்கிய அறிவிப்பு – ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு!
அதிக அளவிலான கிராமப்புற மாணவர்கள் கல்வி ஊக்கத் தொகையை பெற்று பயன்பெற வேண்டும் என்கிற நோக்கில் பெற்றோரது ஆண்டு வருமானத்தை ரூபாய் 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
கல்வி ஊக்கத்தொகை:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கல்வி ஊக்கத் தொகையை அனைத்து மாணவ மாணவிகளும் பெறமுடியாது. அதாவது மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி சலுகை வழங்கப்பட்டு வந்தது.
மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
தற்போது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர்கள் அதிக அளவில் பயனடைய வேண்டும் என்கிற நோக்கில் கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெற்றோரது ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை பெற்றோரது ஆண்டு வருமானம் 72,000 ஆக இருந்தது. 72 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் பெற்றோரின் மாணவ மாணவியருக்கு கல்வி சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தற்போது 3 முதல் 6 வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவிகள் அதிக அளவில் கல்வி உதவித்தொகை பெற வசதியாக இருக்கும் வகையில் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் அதிக அளவில் கிராமப்புற மாணவிகள் இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.