சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ஆகும். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் பீதியில் உள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று பலர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். எனவே இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு:
நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. சர்வதேச தங்கத்தின் விலைகள், செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளூர் வரிவிதிப்புகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தங்கம் விலை உயர சர்வதேச விலைகள் தான் முக்கியக் காரணம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படும்.
IT ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய வசதிகள் அறிமுகம்! முடிவுக்கு வரும் WFH!
இன்றைய தங்கத்தின் விலை, நேற்றைய தங்கத்தின் விலையை விட மாறுபட்டதாக உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் திருமணம் மற்றும் மேற்படிப்பு மிகவும் உதவியாக இருக்கும் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட நம் தமிழகத்தில் தான் நகைப் பிரியர்கள் அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். சுபமுகூர்த்த நாள், அட்சய திருத்தி போன்ற நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும். இருப்பினும் நகை விற்பனையில் எந்த சரிவும் இருக்காது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் எதிரொலியாக அனைத்து இடங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.39,576-க்கு விற்பனையாகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,947-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.