மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அதன் காரணமாக அரசுக்கு போதுமான அளவு நிதி இல்லாததால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
TCS ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 6 முதல் 8 சதவீதம் வரை சம்பள உயர்வு!
இதனை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டு 28% வழங்கப்பட்டது. இதனை மேலும் ஜூலை மாதத்தில் 3% உயர்த்தி வழங்கியது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை வழங்கி வந்தனர். இதில் குறிப்பாக ஜார்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டால் அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெறுவார்கள். அதன்படி இவர்களின் அடிப்படை சம்பளமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஊழியர் ஒரு ரூ.18000யை அடிப்படை சம்பளமாக பெற்றால் அவர்களுக்கு ரூ.6,120 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கிறது. இதே போல் ராஜஸ்தான் மாநிலத்திலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.