பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் கோடை விடுமுறை தொடக்கம் – கல்வித்துறை அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் எனவும், அவர்களுக்கான கோடை விடுமுறைகள் மே 2 முதல் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை மகாராஷ்டிரா பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் கோடை விடுமுறைக்காக மே 2 முதல் ஜூன் 12 வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23ம் கல்வியாண்டுக்கான புதிய அமர்வு ஜூன் 13 முதல் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கவனத்திற்கு – உடனே பாருங்க !
இது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என்றும் விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும் ஜூன் 27 முதல் மீண்டும் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளைப் பொறுத்தவரை, 1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தும் பணிகள் நடைமுறையில் உள்ளன.
தமிழக அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – ரூ.1000 ஊக்கத்தொகை!
தவிர, மகாராஷ்டிரா SSC, HSC தேர்வுகள் ஏற்கனவே மாநில வாரியத்தால் நடத்தப்பட்டுள்ளன. இப்போது 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தவிர, மகாராஷ்டிரா SSC, HSC 2022 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முடிவுகள் மே மாதத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்றும் முடிவு அறிவிப்பிற்கான தகவல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.