தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு நடத்தப்படாத திருப்புதல் தேர்வின் பாடங்கள் பள்ளி நிறுவனங்களால் நடத்தப்பட உள்ளது.
திருப்புதல் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. இதனால் மார்ச் 2ம் தேதி அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பில் 10 , 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மே மாத முதல் வாரத்தில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு! மக்கள் அவதி!
அதற்க்கு முன்னதாக ஏப்ரல் மாத இறுதியில் செய்முறைத்தேர்வுகள் நடக்க உள்ளது. மாணவர்களுக்கு பள்ளி மிகவும் தாமதமாக திறக்கப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு பாடசுமை குறைக்கும் நோக்கில் குறிப்பிட்ட சதவீத பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் நேரடியாக தேர்வை சந்திக்கும் போது ஏற்படும் பதட்டத்தை குறைப்பதற்காக மாணவர்களுக்கு தேர்வுக்கு முன்னதாக 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவை தற்போது நடந்து முடிந்துள்ளது.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.78230/- || தேர்வு கிடையாது
திருப்புதல் தேர்வுகளில் பாட வினாத்தாள் லீக் ஆன விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கான விசாரணைகள் நடந்து வரும் வேளையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய உத்தரவை அனுப்பியுள்ளது. அதன்படி திருப்புதல் தேர்வு நடத்தப்படாத பாடங்களுக்கு பள்ளிகள் அளவில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.