கோயம்புத்தூர் மாநகராட்சியில் வேலை – 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர் / பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு 12.04.2022ம் தேதியன்று நேர்காணல் நடைபெறுகிறது. இந்த நேர்காணலில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
பணியின் பெயர் | மருந்தாளுநர் \ பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் |
பணியிடங்கள் | 13 |
தேர்வு செயல் முறை | நேர்காணல் |
மாநகராட்சி காலிப்பணியிடங்கள்:
- மருந்தாளுநர் – 1
- துணை சுகாதார செவிலியர்கள் – 7
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 5
வயது வரம்பு:
- மருந்தாளுநர் – 35 வயது வரை
- துணை சுகாதார செவிலியர்கள் – 35 வயது வரை
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 40 வயது வரை
கல்வி தகுதிகள்:
- மருந்தாளுநர் – டிப்ளமோ மருந்தாளுநர் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
- துணை சுகாதார செவிலியர்கள் – டிப்ளமோ துணை சுகாதார செவிலியர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
நிபந்தனைகள்:-
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
நேர்க்காணலில் கலந்துகொள்பவர்கள் கொண்டுவர வேண்டியது:-
- கல்விச்சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்கள்.
- இருப்பிட சான்றிதழ்
- ஆதார் அடையாள அட்டை
- சாதி சான்றிதழ் மற்றும் கொரோனா பணி
- மேற்கொண்ட பதவிகள் மாறுதலுக்குட்பட்டது. 2.தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியர்கள் பின்வரும் காலங்களில் இராஜினாமா செய்தல் அல்லது பணியிலிருந்து நின்றுவிட்டால் நேர்க்காணலில் கலந்துகொண்ட நபர்களிலிருந்து மேற்படி பணியிடங்களை நிரப்பப்படும். மேலும் பணியிலிருந்து விலகும் பொழுது முறையான காரணங்கள் இல்லாத பட்சத்தில் 3 மாத ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என ரூ.20/- க்கான முத்திரைத்தாளில் எழுதித்தர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த நபர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 12 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது.