செயற்கை முறையில் கருவுற்ற முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!
இயற்கையாக முல்லையால் கருவுற முடியாது என்பதால் செயற்கை முறையில் கருவுருகிறார். தற்போது முல்லைக்கு குடும்பத்தினர்கள் வளைகாப்பு நடத்தும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அதாவது தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை முல்லை அறிந்துகொள்கிறார். குழந்தை பிறக்காததை மிக பெரிய குறையாக முல்லை நினைத்து கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் இந்த வீட்டில் வாழ முடியாது என நினைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். எனக்கு நீ தான் முக்கியம் என சொல்லி முல்லையை கதிர் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி, ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வீட்டிற்கு சென்ற பிறகும் கூட யாரின் முகத்தையும் பார்க்க முடியாமல் தவிக்கிறார். மருத்துவர் இயற்கை முறையில் கருவுறுதல் மட்டுமே கஷ்டம் என கூறினார். இதனால் செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு அதிகமாக செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி ஒரு ஐடியா கூறுகிறார். அதாவது தற்போது வீடு கட்டுவதை அப்படியே நிறுத்தி வைக்கலாம். அந்த பணத்தை வைத்து முல்லைக்கு மருத்துவம் பார்க்கலாம்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!
தற்போதைக்கு முல்லைக்கு குழந்தை பிறந்தால் போதும் என கூறிவிடுகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்றாலும் கூட அனைவரும் ஒப்பு கொண்டனர். ஆனால் மீனாவிற்கு இதற்கு துளி கூட விருப்பம் இல்லை. இதனையும் தாண்டி முல்லை செயற்கை முறையில் கருவுறும் படியாகவும், அதனை கதிரிடம் சொல்லி முல்லை சந்தோசப்படும்படியும், முல்லைக்கு குடும்பத்தினர்கள் வளைகாப்பு நடத்துவது போலவும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.