பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி, ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி இது வரை மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து வரும் நிலையில் தற்போது பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிய போகிறது. அது பற்றி அடுத்த எபிசோடில் என்ன வர இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் பல மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. கோபியின் திருவிளையாடல்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் எழில் தன்னுடைய படத்தை பார்க்க அப்பாவை வர வேண்டாம் என சொன்னது எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பா ஒருபக்கம் கொல்ல வர மகன் ஒரு பக்கம் ஒதுக்கி வைக்க செய்தாலும் அது எல்லாம் கோபிக்கு பெரிதாக தெரியவில்லை.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜெயிக்கப்போவது யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!
அதை நினைத்து சிறிது நேரம் வருத்தப்பட்டாலும் பின்னர் அவர் வேலைகளை தொடர்ந்து பார்க்கிறார். பாக்கியாவை கிடைக்கும் சாக்கில் எல்லாம் அவமானப்படுத்தி வருத்தப்பட வைக்கிறார். பாக்கியாவும் தன்னுடைய கணவன் தான என நினைத்து மரியாதை கொடுக்கிறார். ஆனால் அவர் கோபியை பற்றிய உண்மை எல்லாம் தெரிய வந்தால் எப்படி எல்லாம் காட்டப்படுவார் என பலர் ஆவலுடன் இருக்கின்றனர். அவை எல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கும் புது நடிகை – ரசிகர்கள் ஷாக்!
பாக்கியா ராதிகா மற்றும் கோபியை கையும் களவுமாக பிடிக்க அது பற்றி குடும்பத்தில் அனைவரிடமும் சொல்லப் போகிறேன் என சொல்லி மிரட்டுகிறார். கோபி வசமாக மாட்டிக் கொண்டுள்ள நிலையில் பாக்கியா அதை எப்படி ஏற்றுக் கொள்வார். ராதிகாவுக்கு விட்டுக் கொடுப்பாரா என்பது எல்லாம் அடுத்த வார எபிசோடுகளில் காட்டப்படும். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மாட்டிக் கொண்ட பின்னர் தான் கதை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.