தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இருப்பினும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது லேசான மழை பொழிவு ஏற்படுகிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் மார்ச்,ஏப்ரல்,மே மாதத்தில் வெளியின் தாக்கம் அதிகமாக காணப்படும். அதிகரிக்கும் வெயிலினால் ஏற்படும் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது.
மதுரையில் நாளை (ஏப்ரல் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கடந்த வாரம் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதனை தொடர்ந்து வரும் 7ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இதனால் 5,6 ம் தேதிகளில் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.