மதுரையில் நாளை (ஏப்ரல் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் நாளை வலையங்குளம், வண்டியூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஏப்ரல் 4) மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எதிர்பாராத விதமாக மின் விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இந்த பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் இதனை பொதுமக்களுக்கு முறையாக அறிவித்து பின் அமல்படுத்தப்படுகிறது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
TNPSC குரூப் 4&VAO தேர்வர்கள் கவனத்திற்கு – காலிப்பணியிடங்களின் விவரம் இதோ!
இதனை தொடர்ந்து மதுரையில் வலையங்குளம், வண்டியூா் ஆகிய துணை மின்நிலைய மின் அழுத்தப் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் வலையங்குளம், வண்டியூா் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 4) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளர் மு.ராஜகாந்தி தெரிவித்துள்ளார். அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடித்தவுடன் மின் மின் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வலையங்குளம், வண்டியூா் ஆகிய துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான நல்லூா், குசவன்குண்டு, வலையங்குளம், நெடு மதுரை, பாரபத்தி, சோளங்குருனி, சின்ன உடைப்பு, வண்டியூா், மண்டேலாநகா், வலையபட்டி, புளியங்குளம், கோழிமேடு, ஓ.ஆலங்குளம், எல்.கே.டி.நகா் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாளை (ஏப்ரல் 4) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளர் மு.ராஜகாந்தி தெரிவித்துள்ளார்.