தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மேலாண்மை பயிற்சி தொடக்கம்!
தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கு மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி ஆகிய இரு தினங்கள் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊழியர்களுக்கு மனு மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல பயிற்சி வழங்கப்பட்டது.
மேலாண்மை பயிற்சி:
தமிழகத்தில் கடந்த வருடம் தீவிரமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு ஊழியர்கள் தன்னலம் கருதாது பணி செய்து வந்தனர். பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். இதனால் ஏராளமானோர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். இந்த நிலையில் அரசு தனது ஊழியர்களின் நலன் கருதி கொரோனா தொற்றுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 7 நாட்கள் தற்செயல் விடுப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் அரசு ஊழியர்களின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த அகவிலைப்படி உயர்வை அறிவித்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்கள் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நேர மேலாண்மை, குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது திறம்பட நடவடிக்கை எடுப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் பயிற்சி இயக்குநர் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார்.