தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை வழங்க இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகின்ற நிலையில் பள்ளிகள் திறக்க ஆரம்பித்து மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பொது தேர்வுகளுக்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், 10ம் வகுப்பிற்கு ஜூன் 17ம் தேதியும் வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளது. அதேபோல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30 நாட்களும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.