சொன்னதை செய்து காட்டிய சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பெற்று வந்தவர் ஆலியா. அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானதை தொடர்ந்து தற்போது அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் ஆலியா மற்றும் சஞ்சீவ் முன்பு சொன்னபடியே செய்து காட்டிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆலியா மற்றும் சஞ்சீவ்:
ஆலியா முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் சிறந்த டான்சர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இவர் ராஜா ராணி சீரியலில் வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் அவர்களையே நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆக்கி கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வருவாரா ?மாட்டாரா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் திரும்பி சீரியலுக்கு வந்து ஷாக் கொடுத்தார். இவ்வாறு அவர் நடித்த சீரியல் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகமே. இதில் இவருக்கு ஜோடியாக சித்து நடித்து வந்தார். சீரியலில் உள்ள போதே மீண்டும் ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் ஆரம்பத்திலேயே விலகுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆலியா கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையிலும் வயிற்றில் குழந்தையுடன் நடித்து வந்தார்.
சமீபத்தில் குழந்தை பிறக்க உள்ளதால் சீரியலை விட்டு விலகி இருந்தார். இருவரும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக உள்ளவர்கள். மேலும்,குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஆலியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் குழந்தை பிறந்தால் ‘லைலா’ என்றும் ஆண் குழந்தை பிறந்தால் ‘அர்ஷ்’ என்றும் வைக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதை சஞ்சீவ் அவர்கள் அவரது இன்ஸ்டாவில் குழந்தையை தூக்கியவாறு உள்ள புகைப்படத்தை ஷேர் செய்து அதில் அவர்கள் முன்னர் கூறியபடி ‘அர்ஷ்’ என்ற பெயரையும் வைத்து போஸ்ட் செய்திருந்தார். ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.