கோபியை நினைத்து கவலைகொள்ளும் எழில், ராதிகா வீட்டிற்கு புறப்படும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!
விஐய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை பற்றி ராமமூர்த்தியிடம் சொல்லி வருத்தப்படும் எழிலை நினைத்து கவலை கொள்கிறார் அவர். மறுபக்கத்தில் கோபியின் நடவடிக்கைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்து ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார் ராமமூர்த்தி.
பாக்கியலட்சுமி சீரியல்
பல எதிர்பாராத சம்பவங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை ஒரு பெண்ணுடன் பார்த்த எழில், இந்த சம்பவம் இப்படியே தொடர்ந்தால் ஒரு நாள் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். மறுபக்கத்தில் இந்த விஷயத்தால் வருத்தப்படும் எழில் இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடில் காலை எழுந்ததும் தாத்தா ராமமூர்த்தியை நடை பழக வைக்கிறார். அப்போது ஏன் சோகமாக இருக்கிறாய் என்று தாத்தா சைகையில் கேட்க, அவர் அழுது கொண்டே மழுப்பலாக பதில் சொல்லி விட்டு கிளம்பு முயலுகிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி!
அப்போது கோபப்படும் தாத்தா என்னடா நடந்தது என்று கேட்க, அப்பா ஏன் தாத்தா இப்படி இருக்கிறார். அப்பா இன்னும் எதையும் விடவில்லை. நேற்று பிக்னிக் போன இடத்தில் அப்பாவை ஒரு பெண்ணுடன் பார்த்தேன். நல்ல வேலை அதை நம்ம வீட்டில் யாருமே பார்க்கவில்லை. இனியா கேட்டப்போ கூட அவர் பிக்னிக் வரவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார். அவரை எதாவது செய்ய வேண்டும் என தோன்றுகிறது. ஆனால் என்னால் முடியவில்லை. நமக்கு ஒரு பிரச்சனை என்றால் அப்பாவிடம் தானே போய் நிப்போம். ஆனால் இந்த வீட்டில் அவர் தான் பிரச்சனையாக இருக்கிறார் என கூறிவிட்டு அழுகிறார் எழில்.
மறுபக்கத்தில் ராதிகாவை வீட்டை விட்டு காலி செய்வதற்காக ஆட்களை வரவைக்கிறார் கோபி. பிறகு இவளையும், பாக்கியாவையும் பிரிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு என்று அலுத்துக்கொள்கிறார் அவர். இப்போது, எழில் கூறியதை நினைத்து கொண்டிருக்கும் ராமமூர்த்தியை பார்ப்பதற்காக கோவிலில் இருந்து வருகிறார் பாக்கியா. பிறகு, ஜெனியிடம் தாத்தாவை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு ஈஸ்வரியை கூப்பிட திரும்பவும் கோவிலுக்கு என்று சென்று விடுகிறார் அவர்.
அப்போது ரூமில் இருந்து எழுந்து வரும் ராமமூர்த்தி, கோபி மற்றும் பாக்கியா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகாவிடம் காட்டுவதற்காக அவரது வீட்டுக்கு செல்கிறார். மறுபக்கத்தில், தாத்தாவை பார்ப்பதற்காக அவரது ரூமுக்கு செல்லும் ஜெனி அவரை காணவில்லை என்றதும் பதட்டப்படுகிறார். பிறகு இனியாவை கூப்பிடும் ஜெனி ராமமூர்த்தியை தேடுகிறார். எங்குமே அவரை காணவில்லை என்றதும் செழியனை கூப்பிட்டு தாத்தாவை காணவில்லை என்று இருவரும் சொல்ல அவரை தேடி செல்கிறார் செழியன். மறுபக்கத்தில் தாத்தா வலியுடன் காலை இழுத்து கொண்டே ராதிகாவை பார்க்க நடந்து சென்று கொண்டிருக்கிறார்.