ரேஷன் கார்டு இல்லாமல் பொருட்களை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் இல்லாத போதிலும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ அமல்படுத்தப்பட்ட பிறகு, மற்ற மாநில மக்களும் இலவச ரேஷன் பெறுகின்றனர்.
ரேஷன் கடை:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரசு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு நாட்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து இந்த கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய வைரஸ் தொற்று பரவல் எதிரொலி!
இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தலைநகர் டெல்லியில் மற்ற மாநில மக்களும் இலவச ரேஷன் பொருட்களை இலவசமாக பெற்று வருகின்றனர். டெல்லியை தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் ரேஷன் அட்டைகள் இல்லாமல் பொருட்களை பெற்று வருகின்றனர்.
இந்த ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மக்கள் பொருட்களை பெற பயனாளிகளின் ரேஷன் அட்டை ஆதார் அட்டை அல்லது வங்கியுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த சலுகை பேருதவியாக இருக்கும். இது தவிர, பயனாளியின் சில காரணங்களால் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்க முடியாமல் போனால் அவருக்கு பதிலாக உங்கள் கார்டில் வேறு யாராவது ரேஷன் வாங்கலாம் என்ற வசதி வழங்கப்பட்டுள்ளது.