TN TRB ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்ட அரசாணை – அதிர்ச்சியில் தேர்வர்கள்!

0
TN TRB ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்ட அரசாணை - அதிர்ச்சியில் தேர்வர்கள்!
TN TRB ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்ட அரசாணை - அதிர்ச்சியில் தேர்வர்கள்!
TN TRB ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்ட அரசாணை – அதிர்ச்சியில் தேர்வர்கள்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இருந்தால் இது போலவே தொடர் போராட்டத்தை நடத்த இருப்பதாக ஆசிரியர்கள் எச்சரித்து உள்ளனர்.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம்:

தமிழகத்தில கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து பல தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இந்த இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வையாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்கள் தொழில்நுட்ப உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – இந்தியாவிலேயே முதல்முறையாக பர்னிச்சர் பூங்கா!

மேலும் அவர்கள் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரம் உள்ள பிற மாவட்டங்களுக்கு சென்று பணிபுரிய வேண்டும் என்று ஆணை வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் அவதிக்கு ஆளாகும் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு இந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு இல்லாமல் பொருட்களை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் பேச்சிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்களை அலைகழித்து தேர்வு பணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுங்கள் இல்லை என்றால் இந்த போராட்டம் நீடிக்கும் என்று மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!