தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய வைரஸ் தொற்று பரவல் எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான “பிஏ 2” வைரஸ் தமிழகத்திலும் தொற்று பரவினால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததால் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் உணவகங்கள், தியேட்டர்கள், மால்கள், கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 100% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சமுதாய, அரசு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள்!
மேலும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 250 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் வருகிற மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
வரலாறு காணாத அளவு உயரும் பெட்ரோல், டீசல் விலை? கச்சா எண்ணெய் புதிய உச்சம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ஆனால் தற்போது அநேக இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றனர் என்றும் இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த “பிஏ 2” வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இது ஒமைக்ரான் வைரஸை விட அதி வேகமாக பரவக்கூடியதாகவும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் தமிழகத்தில் பரவ தொடங்கினால் மீண்டும் கடைகளின் நேர கட்டுப்பாடு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.