TNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம்
இங்கு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
- பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன.
- இவற்றை ‘மேல்கணக்கு நூல்கள்’ என்று கூறும் வழக்கமும் உண்டு.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
1. நாலடியார்
- நாலடியார் ஆசிரியர் – சமணமுனிவர்
- நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
- அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.
- ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்குண்டு.
- இந்நூல் சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
- “நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு” – சமணமுனிவர்
2. நான்மணிக்கடிகை
- நான்மணிக்கடிகை – ஆசிரியர் – விளம்பிநாகனார்
- விளம்பி என்பது ஊர் பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- கடிகை என்றால் அணிகலன் (நகை) ஆகும்.
- நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
- ஒவ்வொரு பாட்டும் நான்கு மணி மணியாக அறக் கருத்துக்களை கொண்டது.
- “மனைக்கு விளக்கம் மடவாள்;மடவாள்
துனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு”. – விளம்பிநாகானார்
3. இனியவை நாற்பது – பூதஞ்சேத்தனார்
ஆசிரியர் குறிப்பு
- பெயர் – மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேத்தனார்
- ஊர் – மதுரை
- காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
- நூல் குறிப்பு – இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பதுப் பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
4. இனியவை நாற்பது
- “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.” - “சலவைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது” – பூதஞ்சேந்தனார்
5. பழமொழி, நானூறு
- கல்வியின் சிறப்பு – ஆசிரியர் – முன்றுறை அரையனார்.
- ஆசிரியர் குறிப்பு
- முன்றுறை என்பது ஊர்பெயர் அரையான் என்பது அரசனைக் குறிக்கும் சொல்.
- முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் உன்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு:
- பதினெண்கீழக்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு
- நானூற்று பாடல்களைக் கொண்ட நூல் இது.
- ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.
- ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ என்பதற்கு ‘கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்’ என்று பொருள்.
- பழமொழி நானூறு
- “ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடு ஆகர் தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்”.- முன்றுறை அரையனார்
6. ஏலாதி
ஆசிரியர் குறிப்பு
- ஏலாதியை இயற்றியவர் கணமேதாவியார்.
- இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
- இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
- இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.
- இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
- “வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து”. – கணிமேதாவியார்
நூற்குறிப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி.
- இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எணபத்தொரு வெண்பாக்களை கொண்டுள்ளது.
- நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
- இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
- ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம் சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
- இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.
- அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
- இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல் நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.
7. சிறுபஞ்சமூலம்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – காரியாசான்
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
- இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
- இவரும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணக்கராவர்.
- பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்குருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
நூல் குறிப்பு:
- சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றெழு வெண்பாக்கள் உள்ளன.
- கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையும் உடல் நோயைத் தீர்ப்பன. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயைப் போக்குவன.
- ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
- “கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்- பண்வனப்புக்
கேட்டார்நன்; றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு”. – காரியாசன்
8. முதுமொழிக்காஞ்சி
- ஆசிரியர் – மதுரைக் கூடலூர் கிழார்.
- பிறந்த ஊர் – கூடலூர்
- சிறப்பு – இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோளாகக் கையாண்டுள்ளார்கள்.
- காலம் – சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு:
- முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
- அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
- பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள் உள்ளன.
- இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
சிறந்த பத்து:
(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து)
- ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை - காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
- மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
- வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை
- இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
- நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
- குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
- கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
- செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
- முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று. – மதுரைக் கூடலூர்கிழார்
தமிழ் இலக்கியம் – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் PDF Download
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download
TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்