TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
TNPSC இணையதளத்தில் நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தேர்வாணையம் தேர்வர்களுக்கு தெரிவித்துள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத் துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டிற்கான TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த வருட இறுதியில் வெளியானது. இதில் 2022ம் ஆண்டு 32 வகையான TNPSC தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதிக தேர்வர்களால் எழுதப்படும் குரூப் 2 தேர்வு குறித்த அறிவித்தது இந்த மாதம் வெளியிடும் என்று தேர்வாணையம் அறிவித்த நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தலைவர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
மேலும் இந்தாண்டு முதல் TNPSC தேர்வு முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு இளைஞர்களை 100% அரசு பணிகளில் ஈடுபடுத்தவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவும் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!
அதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பாக TNPSC இணையதளத்தில் நிரந்தர பதிவு (OTR) வைத்துள்ளவர்கள் அதனுடன் உங்களின் ஆதார் எண்ணை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அரசு பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இனிமேல் நடைபெற விருக்கும் அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் OTR கணக்கு மூலமாகவே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 18004190958 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.