தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தளர்வுகள்:

தமிழகத்தில் கடந்த 2021 மே மாதம் தீவிரமெடுத்த கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. தொற்று பாதிப்புகளை அடிப்படையாக வைத்து அவ்வப்போது தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகளில் இருந்தே மக்கள் மீண்டு வர முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்றும், வேகமெடுக்க தொடங்கியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வர் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மீண்டும் இரவு ஊரடங்கு அமல், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – மாநில அரசின் உத்தரவு!

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் இரவு நேர மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அரசின் இந்த முயற்சிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததை அடுத்து இரவு மேரா மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் மட்டும் அமலில் இருந்து வருகிறது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிரவரி 15ம் தேதியுடன் (செவ்வாய் கிழமை) முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவத்துறை அதிகரிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிப்.16 முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்!

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவகங்கள், திரையரங்குகள் விடுதிகளில் 100% பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவு வெளியாக உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!