தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாகர்கோவில் நகர பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த வகையில் மின் கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான விபத்துக்களை தவிர்ப்பதற்கு மின்வாரியம் அதிக கவனம் செலுத்தி இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் போது சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின் தடை ஏற்படும்.
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்! முழு விபரம் இதோ!
இந்த வகையில் நாகர்கோவில் உப மின்நிலையத்தில் ஜன.25 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம் அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மற்றும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.சாலை, கல்லூரி சாலை, கோர்ட் சாலை, கே.பி. சாலை, பால் பண்ணை.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கல்!
நேசமணி நகா், தோப்பூா், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையார் விளை, காரவிளை, வைராகுடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, மற்றும் அனந்தநாடார்குடி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் ஏற்றப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய நாகர்கோவில் செயற்பொறியாளர் சி.ராஜசேகா் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.