மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயர்வு? விரைவில் ஜாக்பாட்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயர்வு? விரைவில் ஜாக்பாட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயர்வு? விரைவில் ஜாக்பாட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயர்வு? விரைவில் ஜாக்பாட்!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிடும். அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சியான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளை அரசு சந்தித்து வந்தது. அதனால் அரசின் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கடந்த ஆண்டு ஓரளவு கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படியை உயர்த்தி தருமாறு கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்வு வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அத்துடன் பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தி வழங்க உள்ளதாக மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தற்போது fitment factor உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்படும்.
இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு fitment factor உயர்த்தப்பட்டபோது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 6000 ரூபாயிலிருந்து 18000 ரூபாயாக வழங்கப்பட்டது. தற்போது fitment factor-யில் உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு fitment factor-யில் உயர்வு ஏற்பட்டால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 26000 உயரும்.

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்! முழு விபரம் இதோ!

ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிடுவது நடைமுறையில் உள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியில் 3% உயர்வு ஏற்படும். அதாவது அகவிலைப்படி 31% இருந்து 34% ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அறிவிப்புகள் மூலமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் உயர்வு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!