மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கல்!
தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பாக்கித் தொகையை வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கு கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28 % ஆக அதிகரிக்கப்பட்டது. பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கேபிள் டிவி நிறுவனம்!
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வந்தனர். இதனால் நாடு முழுவதும் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவில் அகவிலைப்படி 7.28 சதவீதத்தில் இருந்து 17.29 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும், 2021 ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களின் அடிப்படை ஊதிய உயர்வு 30 % அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையும் 2021 ஜனவரி மாதம் 1 என்று மூன்று அகவிலைப்படி பாக்கித் தொகைகள் நிலுவையில் உள்ளது.
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றுவது எப்படி? RBI அறிவித்த வழிமுறைகள் இதோ!
தற்போது மாநில அரசு இந்த அகவிலைப்படி பாக்கித் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு GPF கணக்குகளில் அகவிலைப்படி நிலுவை தொகை வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் மூன்று அகவிலைப்படி பாக்கித் தொகைகளை வழங்கிய தெலுங்கானா முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.