Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் – சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விபரங்கள் இதோ!
தபால் நிலையத்தின் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. அந்த வகையில் இத்திட்டம் பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது .
சிறப்பம்சங்கள் என்னென்ன:
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு இணையாக அதிக வட்டி தொகையை கொடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் பொதுமக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் ,கிசான் விகாஸ் பத்ரா, பொது வைப்பு நிதி ,5 வருட மாத வருமான கணக்கு ஆகிய திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து செல்வ மகள் சேமிப்பு திட்டம் (‘சுகன்யா சம்ரிதி யோஜனா’) ,பெண் குழந்தைகளுக்கான சிறப்பான திட்டமாகும்.
TNSPC இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு!
இத்திட்டம் பெண் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்ற தேவைகளுக்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கி பயன் பெறலாம். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் குழந்தையின் வயது சான்றாக பிறப்புச் சான்றிதழைக் கொடுக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கணக்கை ரூ.250 செலுத்தி தொடங்கி கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி அளிக்கப்படுகிறது. திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையில் முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்ற உடன் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. மற்ற சிறு சேமிப்பு திட்டங்களை விட செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது. இதுவே இத்திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.