TNSPC இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மாற்று கூட்டுறவுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அரசு பணிகள் தேர்வாணையத்தில் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கி வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து அரசுத்துறையும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை மாற்று கூட்டுறவுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு TNPSC தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்துக்கு கொரோனா தடுப்பூசி அவசியம் – அமைச்சர் தகவல்!
அதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் (கிரேடு 1) பதவியில் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கான தேர்வு ஏப்ரல் 23ம் தேதி அன்று காலை நடைபெற உள்ளது. மேலும் தேர்வுக்கு ஜனவரி 21ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு 23.04.2022 அன்று காலை முதல் தாள் 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தற்போதைய புதிய நடைமுறையின்படி TNPSC தேர்வில் தமிழ்மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி கட்டாய தகுதி தேர்வில் 10ம் வகுப்பு கல்வி தரத்தில் 100 வினாக்கள் இடம்பெறும். அடுத்ததாக பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும்.
வார இறுதி ஊரடங்கு அமல், புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு – அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 24ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மூன்றாம் தாள் தேர்வு நடைபெறும். இதில் சட்டம் தொடர்பான 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 8 தணிக்கை பதவிகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாளும் அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறவுள்ளது. எழுத்து தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் மேலும் கல்வி தகுதி, தேர்வு கட்டணங்கள் போன்ற விவரங்கள் TNPSC தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.