தனது கணவரை பற்றி முதன்முறையாக மனம் திறந்த “பிக் பாஸ்” பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களின் ஒருவராக இருந்து இரண்டாம் இடம் பிடித்த ப்ரியங்கா, தனது கணவர் பற்றி சொல்லாததற்கு விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் பிரியங்கா:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 105 நாட்கள் மக்களின் பேராதரவுடன் நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் வெற்றியாளராக மக்களின் அதிகமான வாக்குகள் பெற்று ராஜு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் கோப்பையும், ரூ. 50 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. அவருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார். அவரும் ராஜுவும் சேர்ந்து செய்த நகைச்சுவைகள் இணையத்தில் ட்ரெண்டானது. ஆனால் அவர் தாமரை உடன் நடந்து கொண்ட விதம் மக்களை முகம் சுளிக்க செய்தது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் சுஜிதாவின் நியூ கெட்டப் – வைரலாகும் வீடியோ!
மற்ற அனைத்திலும் மக்கள் ஆதரவு கொடுத்ததால் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் அவரவர் தன்னுடைய வாழ்க்கை கதையை பேசும் போது தனது கணவர் பற்றி சொன்னார்கள் ஆனால் பிரியங்கா அது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதனால் ரசிகர்கள் பிரவீன் என்ன ஆனார் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வைத்தனர். ஏன் ஒரு இடத்தில் கூட பிரியங்கா பிரவீன் பற்றி பேசவில்லை. இருவருக்கும் விவாகரத்து நடந்துள்ளதா என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
அதனை தொடர்ந்து பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் மக்களிடம் லைவில் பேசினார். அப்போது ஏகப்பட்ட பேர் பிரவீன் பற்றி கேள்வி கேட்டார்கள். அதற்கு விளக்கம் சொன்ன பிரியங்காம், பர்சனல் கேள்விகள் நிறைய கேட்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக பிரவீன் குறித்து நிறைய பேர் கேட்கிறீர்கள். உங்களின் ஆர்வம் புரிகிறது.இதற்கு கண்டிப்பாக ஒருநாள் விளக்கம் தருகிறேன். இதற்கான பதிலை மீண்டும் இதே போல் ஒரு லைவில் வந்து பேசுகிறேன். இப்போதைக்கு இந்த பர்சனல் கேள்வி குறித்து பேச வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.