‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – அதிர்ச்சியில் பாக்கியா & குடும்பத்தினர்!
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் அதிக அளவிலான குடும்ப தலைவிகளை ரசிகைகளாக பெற்றுள்ளது. குடும்ப தலைவியான பாக்கியா தனது குடும்பத்தை வழிநடத்தும் படி கதை அமைக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
கோபியின் முடிவு:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கணவர் கோபி தனது மனைவியிடம் எந்த வித ஒட்டுதலும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் தன் 3 பிள்ளைகளிடமும் மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவரா இருக்கிறார். தன் அப்பா தனது நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவபதற்காக அவரின் மகளை தனக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டதால் தனது வாழ்க்கையே வீணாகி விட்டதாக நினைக்கிறார் கோபி. இடையில் தனது சிறு வயது தோழி ராதிகாவை எதேர்சையாக சந்திக்கிறார்.
அப்படியே இவர்களின் நட்பு வளர்ந்து வருகிறது. ஒரு நாள் கோபியின் அப்பா கோயிலில் ராதிகா மற்றும் கோபி இருவரையும் சந்திக்கிறார். இதனை பற்றி கோபியிடம் கேட்டதற்கு சும்மா தான் என்று மழுப்பி விடுகிறார். ஆனால் ராமமூர்த்தி இதை இப்படியே விட கூடாது என்று நேரடியாக ராதிகாவின் வீட்டில் போய் சத்தம் போடுகிறார். இதனால் ராதிகாவின் அம்மா கோபி மீது அதிக கோவம் கொள்கிறார். இதனால் தான், கண்டிப்பாக ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கோபி சத்தியம் செய்கிறார்.
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடிக்கும் பாக்கியா, ஆறுதல் சொன்ன எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி’ எபிசோட்!
ராதிகாவின் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால், கோபியையும் விரைவில் விவாகரத்து பெற சொல்கிறார். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க இல்லையென்றால் ராதிகாவை பார்க்க வராதீங்க என்று சொல்கிறார். ராதிகாவும் அம்மாவின் முடிவிற்கு கோபி சம்மதிக்கிறார். இந்நிலையில், கோபியும், ராதிகாவும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்வது போல் காட்சிகள் வர இருக்கிறது. இந்த விஷயம் பாக்கியா மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு பாக்கியா என்ன முடிவு எடுப்பார் என்று பெரிய திருப்பங்கள் காத்திருக்கிறது.