கோபி ஏமாற்றுவதை கண்டுபிடிக்கும் பாக்கியா, ஆறுதல் சொன்ன எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி’ எபிசோட்!

0
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடிக்கும் பாக்கியா, ஆறுதல் சொன்ன எழில் - இன்றைய
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடிக்கும் பாக்கியா, ஆறுதல் சொன்ன எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி' எபிசோட்!
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடிக்கும் பாக்கியா, ஆறுதல் சொன்ன எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி’ எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபி காரில் சாக்லேட் கவருகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் கோபியின் நடவடிக்கைகள் அவருக்கு சந்தேகம் வருகிறது. அதை பற்றி எழிலிடம் சொல்லி பாக்கிய வருத்தப்படுகிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியின் காரை திறந்து பார்க்க அங்கே தேவையில்லாத குப்பைகள் இருக்கிறது. எப்படி காரில் குப்பை போயிருக்கார் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு பாக்கியா வர, அப்போது செல்வி என்ன அக்கா குப்பை எல்லாம் கொண்டு வந்து இங்கே வைக்கிறாய் என கேட்கிறார். இதெல்லாம் அவர் காரில் கிடந்தது அதில் தேவையான பில் எதாவது இருக்கும், அதை தூக்கி போட்டால் அவர் என்னை கத்துவாரு என சொல்கிறார். பின் இனியா வந்து இந்த பில் எல்லாத்தையும் பிரித்து பார்க்க அதில் ஜாக்கெட் தைத்த பில் இருக்கிறது.

அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். செல்வி சார் நடவடிக்கை எல்லாம் சரி இல்லை இதை எல்லாம் நீ கேட்க வேண்டும். இல்லை என்றால் உன்னை விட்டு சென்றுவிடுவார் என சொல்ல, பாக்கியா செல்வியை சும்மா இருக்க சொல்கிறார். பின் இந்த பில்லை வைத்து நடந்தது பற்றி நினைத்து கேட்கிறார். பின் இது பற்றி கேட்டுருவோம் என நினைத்து பாக்கியா கோபி ரூமிற்கு வருகிறார். என்ன பாக்கியா என கோபி கேட்க, நான் முக்கியமான போன் பேசிக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார்.

மீனாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் ஐஸ்வர்யா, கோவப்பட்ட தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

என்ன விஷயம் பாக்கியா என கேட்க, பாக்கியா எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். கோபி ராதிகாவிடம் மீண்டும் பொய் பேசுகிறார். பாக்கியா எப்படி இதை கேட்பது என தெரியாமல் வருத்தத்துடன் நடந்து வர, இதே போல ஏற்கனவே நடந்த பில்லை பார்த்து பாக்கியா வருத்தப்படுகிறார். பாக்கியா தூக்கம் வராமல் இருக்க எழில் நேரமாக வருகிறார். நீ ஏன் தூங்காமல் இருக்க என எழில் கேட்க, தூக்கம் வரவில்லை என பாக்கியா சொல்கிறார். பாக்கியா எழிலை தூங்க சொல்லி கிளம்ப, இனிமேல் எனக்கு தூக்கம் வருவதாக தோன்றவில்லை என சொல்கிறார்.

எழில் உன் முகமே சரி இல்லையே அப்பா எதாவது சொன்னாரா என கேட்க, அவர் எதுவும் சொல்லவில்லை என பாக்கியா சொல்கிறார். உன் முகம் சரி இல்லை என்ன ஆச்சு சொல்லு என கேட்க, பாக்கியா அப்பா என்னை ஏமாத்துறாரா என கேட்கிறார். எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை விடு என பாக்கியா சொல்லு, இல்லடா அப்பா என்னை திட்டினாலும் அவர் வேறு எந்த பெண்ணையும் நினைக்கவில்லை என்று நம்பினேன் ஆனால் இப்போது வேற யாருடையோ பேசுகிறார் போல தோன்றுகிறது என சொல்கிறார்.

மகளின் நிலைமையை நினைத்து கோவப்பட்டு பேசிய சண்முகம், லக்ஷ்மியை கூட்டிச் சென்ற கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அவர் தான் உன்னை திட்டி கொண்டே இருக்கிறார். அதனால் அவர் போனால் என்ன அவரை விட்டுவிடு என எழில் சொல்ல, பாக்கியா கோபப்படுகிறார். நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என எழில் சொல்ல, இது நம்ம குடும்பம் அவரும் நானும் மட்டும் குடும்பம் இல்லை எல்லாரும் சரியாக இருந்தால் தான் அது குடும்பம் என பாக்கியா சொல்கிறார். அப்பா அப்படி எல்லாம் இருக்கமாட்டார் நீ எதுவும் நினைக்காதே என எழில் ஆறுதல் சொல்ல பாக்கியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!