மீனாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் ஐஸ்வர்யா, கோவப்பட்ட தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மீனாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் ஐஸ்வர்யா, கோவப்பட்ட தனம் - இன்றைய
மீனாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் ஐஸ்வர்யா, கோவப்பட்ட தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மீனாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் ஐஸ்வர்யா, கோவப்பட்ட தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா முல்லை அம்மா வீட்டிற்கு ஏன் போயிருக்காங்க என துருவி துருவி கேள்வி கேட்க தனம் உண்மையை மறைகிறார். பின் மீனாவிடம் ஐஸ்வர்யா முல்லை மருத்துவமனை சென்றதை சொல்ல தனம் கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்திடம் கதிர் ஏன் நேரமாகும் என மாமாவிற்கு சொல்லவில்லை என கேட்க, அவன் என்னிடம் சொல்லி சொல்ல சொன்னான் என சொல்லி சமாளிக்கிறார். முல்லை அவரது அம்மா வீட்டிற்கு தான் போனார் என சொல்ல, மீனா கேள்வி மீது கேள்வியாக கேட்கிறார். உடனே தனம் எல்லாத்துக்கும் பொய் சொல்லி சமாளிக்கிறார். பின் முல்லை அவர் அம்மா வீட்டிற்கு போக அங்கே முல்லை அப்பா பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். கதிர் அதை பார்த்து சிரிக்க முல்லை அம்மா வந்து இருவரையும் உள்ளே வர சொல்கிறார்.

பின் கதிர் முல்லையை அங்கே விட்டு விட்டு சாயங்காலம் வருவதாக சொல்கிறார். மதியம் சாப்பிட வாங்க என முல்லை அம்மா சொல்ல, அதெல்லாம் இருக்கட்டும் என சொல்கிறார். மருத்துவமனைக்கு போறீங்களா என கேட்க, அதெல்லாம் மல்லி கூட்டுக் கொண்டு செல்வதாக சொல்ல, மூத்த பொண்ணு வந்ததும் எங்களை மறந்துடீங்க என முல்லை கிண்டல் செய்கிறார். கதிர் யாராவது மருத்துவமனைக்கு கூட்டி சென்றால் சரி தான் என சொல்கிறார். இருந்துவிட்டு போகலாம் என சொல்ல, எனக்கு நிறைய வேலை இருக்கிறது என கதிர் கிளம்புகிறார்.

மறுபக்கம் தனத்திடம் பேச மீனா வர, வீட்டில் ஆளே இல்லாதது போல இருக்கிறது என கேட்கிறார். முல்லை கதிர் இன்னும் வரவில்லையா என கேட்க, வந்துருவாங்க என சொல்கிறார். அவங்க அம்மாவிற்கு எதுவும் உடம்பு சரி இல்லையா என கேட்க, அதெல்லாம் இல்லை என தனம் சொல்கிறார். ஐஸ்வர்யா என்ன வேற மாதிரி சொல்வதாக நினைக்கிறார். பின் யாருக்கு உடம்பு சரி இல்லை என ஐஸ்வர்யா கேட்க, முல்லை அம்மா வீட்டிற்கு போயிருக்கா அதை தான் மீனா கேட்பதாக சொல்ல, அவங்க மருத்துவமனைக்கு தான போய்யிருக்காங்க அதை பற்றி நீங்க பேசுவதாக நினைத்தேன் என சொல்கிறார்.

மீனா யாரு மருத்துவமனைக்கு போயிருக்காங்க முல்லை அம்மாவிற்கு உடம்பு சரி இல்லையா என கேட்கிறார். இல்லை முல்லை அக்காவிற்கு குழந்தை இல்லை அதனால் மருத்துவமனைக்கு போயிருக்காங்க என சொல்ல, அப்படியா என தனத்திடம் கேட்கிறார் . ஆமாம் அவள் குழந்தை இல்லை என நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக சொல்ல, மீனா இதற்கெல்லாம் ஏன் மருத்துவமனைக்கு போக வேண்டும் என கேட்கிறார். அவள் இதை நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக சொல்ல, ஐஸ்வர்யா நல்லா சமாளிக்கிறீர்கள் என சொல்கிறார்

மகளின் நிலைமையை நினைத்து கோவப்பட்டு பேசிய சண்முகம், லக்ஷ்மியை கூட்டிச் சென்ற கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அதனால் தனம் கோவப்பட்டு சத்தம் போடுகிறார். நாங்க பேசுவதை ஒட்டு கேட்டியா என கேட்க இல்லை நான் வரும் போது நீங்க பேசிக் கொண்டு இருந்தீங்க அது என் காதில் விழுந்ததாக சொல்கிறார். எந்த நேரத்தில் எது பேச வேண்டும் என உனக்கு தெரியாதா மீனா நீ எதுவும் தவறாக நினைக்காதே என சொல்கிறார். கதிர் கடைக்கு செல்ல மூர்த்தி அதற்குள் எதுக்கு கடைக்கு வந்தாய் என கேட்கிறார். மருத்துவமனைக்கு சென்று என்ன சொன்னார்கள் என கேட்க, நாளைக்கு வர சொன்னார்கள் என சொல்கிறார். மீதி பணத்தை கதிர் கொடுக்க வைத்துக் கொள் என சொல்கிறார்.

மீனா அவரது அம்மாவிற்கு போன் செய்ய, அப்போது மீனா வருத்தப்பட்டு பேச, முல்லைக்கு தான் பிரச்சனை என சொல்கிறார். அப்போது நான் கல்யாணம் முடிந்து குழந்தை பற்றி நினைக்கவே இல்லை. ஆனால் முல்லைக்கு குழந்தை இல்லை என வருத்தப்படுகிறார்கள் போல அதான் மருத்துவமனைக்கு சென்று இருக்காங்க, அவங்க கொஞ்ச நாட்களாக சோகமாக இருக்காங்க எனக்கு இதை பற்றி நினைக்க முடியவில்லை என சொல்கிறார். பின் எதுவும் பிரச்சனை இருக்காது அவங்க வந்ததும் என்ன என்று கேளு அப்படி சொல்ல, ஐஸ்வர்யா அதையும் கேட்கிறார். மீனா அக்காக்கு எவ்வளவு பாசம் என நினைக்க, தனத்தை பற்றி மீனாவிடம் குறை சொல்ல வருகிறார். உடனே மீனா உஷாராக இப்போ உன்னிடம் பேச இஷ்டம் இல்லை என கேட்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!