ஜன.29 வரை 17 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜன.29 வரை 17 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஜன.29 வரை 17 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஜன.29 வரை 17 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்றுநோய் நிலைமையை மறுஆய்வு செய்த அரசு அதிக எண்ணிக்கையிலான பாசிட்டிவிட்டி விகிதம் உள்ள 17 நகரங்களுக்கு மட்டும் இன்று (ஜன.22) முதல் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

ஊரடங்கு அமல்

கொரோனா 3ம் அலை வழக்குகளின் எழுச்சிக்கு மத்தியில் குஜராத் மாநில அரசாங்கம், அதிக நேர்மறை விகிதங்களை பதிவு செய்து வரும் 17 நகரங்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்திருக்கிறது. இது தவிர குஜராத்தின் எட்டு பெருநகரங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இக்கட்டுப்பாடுகள் ஜனவரி 29ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் இப்போது தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பு!

அதே வேளையில், ஜனவரி 22 முதல் ஜனவரி 29 வரை அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவின் போது, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான ஹோம் டெலிவரி சேவைகளை 24 மணிநேரமாக அரசாங்கம் தளர்த்தியுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களை இரவு 10 மணி வரை 75 சதவீத திறனுடன் செயல்பட அனுமதித்துள்ளது. குஜராத் அரசின் இத்தகைய முடிவானது, மாநிலத்தில் தற்போதுள்ள தொற்றுநோய் நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் தற்போது, ஆனந்த் மற்றும் நாடியாத் நகரங்கள் தவிர அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், ஜூனாகத், பாவ்நகர் மற்றும் காந்திநகர் ஆகிய 8 பெருநகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் சுரேந்திரநகர், திரங்ராத்ரா, மோர்பி, வான்கனேர், தோராஜி, கோண்டல், ஜெட்பூர், கலவாட், கோத்ரா, விஜல்பூர் உள்ளிட்ட 17 நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு இன்று (ஜன.22) முதல் பிறப்பிக்கப்படும்.

விஜய் டிவியை விட்டு வேறு சேனலுக்கு தாவிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

இதற்கிடையில் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரவு ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும். அந்த வகையில் கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டிங், சலூன்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்கள் போன்றவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அரசியல், சமூக மற்றும் மதக் கூட்டங்கள் அதிகபட்சமாக 150 நபர்களுடன் திறந்தவெளியில் அனுமதிக்கப்படுகின்றன. அதுவே ஒரு மூடப்பட்ட இடத்தின் கொள்ளளவில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும் பங்கேற்பாளர்கள் இருக்கலாம்.

மேலும் இறுதிச் சடங்கில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு இரவு நேர ஊரடங்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பேருந்துகள் அனைத்தும் 75 சதவீத இருக்கை வசதியுடன் இயங்க முடியும். அடுத்ததாக திரையரங்குகள், நீர் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், ஆடிட்டோரியங்கள், நூலகங்கள் போன்றவை அவற்றின் திறனில் 50 சதவீதத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!