அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதார் கார்டுடன் இணைப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதார் கார்டுடன் இணைப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டு இணைப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் இருந்து உணவு தானியங்கள், எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது. அத்துடன் தனிநபரின் முகவரி சான்றாக ரேஷன் கார்டுகள் செயல்படுகிறது. அத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களை ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கி வருகின்றனர். இதில் குறிப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சுகாதாரத் துறையில் கிராம செவிலியர் வேலை – விண்ணப்பிக்க பிப்.9ம் தேதி கடைசி நாள்!

இதனை தொடர்ந்து தற்போது ஒரு குடும்ப அட்டைதாரர் தனது பங்கை விட அதிகமாகப் பெற்று வருவது நடந்து வருகிறது. அத்துடன் ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களையும் பெற தகுதியற்ற நபர்கள் மலிவான பொருட்களை பெற்று அதனை அதிக விலைக்கு விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு விதிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி தகுதியான நபர்கள் மட்டும் அவர்களது பொருட்களை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்களின் பட்டியல் – A டூ Z விபரங்கள் இதோ!

தற்போது ஆன்லைன் முறையில் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

1. முதலாவதாக அதிகாரப்பூர்வ ஆதார் சீடிங் அப்ளிகேஷன் தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் “இப்போது தொடங்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.

2. அடுத்ததாக மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட தகவலை உள்ளிட வேண்டும்.

3. இதையடுத்து “ரேஷன் கார்டு” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அடுத்ததாக ‘ரேஷன் அட்டை’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. அதில் ரேஷன் அட்டை எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

6. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

7. இந்த OTP எண்ணை தற்போது உள்ளிட வேண்டும்.

8. அடுத்ததாக விண்ணப்பித்தல் வெற்றிகரமாக இருந்தது என்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும்.

9. இறுதியாக விண்ணப்பம் உடனடியாக சரிபார்க்கப்பட்டு ஆதார் அட்டை தங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பைப் பெறுவீர்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!