மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதனால் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
ஓய்வு பெறும் வயது உயர்வு
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து புதிய வகை கொரோனா வைரஸான ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன் மோகன் அவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார். இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
10 & 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது அத்துடன் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸான 3வது தவணை தடுப்பூசியை செலுத்துவது மற்றும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் HRA தொகை? முழு விவரங்கள் இதோ!
அதனால் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 62 வயதாக ஆக உயர்த்தப்படும் என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நாட்டில் அரசு பணிக்கு தயாராகி வரும் போட்டி தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.