10 & 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய கடற்படையில் உள்ள பல்வேறு பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடற்படையில் வேலை:
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையில் 10th, +2 (பி.டெக்) கேட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்), எக்ஸிகியூட்டிவ் ஐடி கிளை, எஸ்எஸ்சி அதிகாரி பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் HRA தொகை? முழு விவரங்கள் இதோ!
இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
நிறுவனம்: இந்திய கடற்படை
காலியிடங்கள்: 76
பணி: 10, +2, B.Tech
கல்வித்தகுதி: 10, +2, B.Tech வகுப்பில் 70% மதிப்பெண்ணுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தது 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2003 ஜன.2ம் தேதி முதல் 2005 ஜூலை 1ம் தேதிக்கு இடையில் பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.02.2022
பணி: SSC, IT
கல்வித்தகுதி: 10 மற்றும் 12ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2022
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு https://www.joinindiannavy.