பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!

0
பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு - மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!
பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு - மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!
பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள போதிலும் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. மேலும் ஆன்லைன் வழியாகவே அலகுத் தேர்வுகளும் நடத்தப்பட்டது. பொதுத் தேர்வுகளை நடத்த தேதிகள் திட்டமிட்டிருந்த போதிலும், அதிக கொரோனா பாதிப்புகள் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் ஆரம்பத்தில் கொரோனா 2ம் அலை உச்சத்தில் இருந்த காரணத்தால் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். இதனால் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஆனால் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கோவிட்-19 தொற்று நேர்மறை விகிதம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, விடுமுறையை நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆந்திர அரசு பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் டாக்டர் ஆதிமுலபு சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனால் இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறந்து செயல்பட்டு வருகின்றது. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 30ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!