தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் இனி வாரந்தோறும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் இரவு நேர ஊரடங்கிற்கு மத்தியிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தாக்கமானது பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வர, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மீண்டும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பானது பல ஆயிரங்களை கடந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது இந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஊரடங்கு காலங்களில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனை ஆகியவற்றுக்கு மற்றும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இத்தகைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் கடந்திருக்கும் நிலையில் தினசரி நோய் தொற்று பாதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் அறியப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் தங்களது தொழில்களுக்கு செல்லவிருப்பதால், தமிழகத்தில் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – 5 ரூபாய் முதலீட்டில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

இது தவிர இரவு நேர ஊரடங்கில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்த அரசு, பேருந்து போக்குவரத்து சேவையை நிறுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கை சனிக்கிழமைகளிலும் செயல்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று அரசு தெரிவித்திருக்கும் நிலையில், ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!