15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் – அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிபவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். மேலும் இதுவரை மாநிலத்தில் 7,52,000 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரேஷன் கார்டு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்றத்தேர்தலில் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இத்துடன் கூடுதலாக மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. முதல்வர் வாக்குறுதி அளித்தபடி 4000 ரூபாய் நிவாரண தொகை 2 தவணைகளாக வழங்கப்பட்டது.
அடுத்ததாக குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உணவு வழங்கல்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் இனி புதிய ரேஷன்கார்டு வேண்டி விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!
அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருள்கள் வழங்கப்படும். மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 800 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் வகையில் அரிசி ஆலை நிறுவப்படும் என்று நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.