பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.4 லட்சம் வரை பெறலாம் – முழு விபரம் இதோ!
மத்திய அரசு மக்களின் நலன் கருதி விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் இணைவதன் மூலம் விபத்து மற்றும் இறப்பு காலத்தில் ரூ.4 லட்சம் வரை பெற முடியும். இந்த திட்டங்கள் குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
காப்பீட்டு திட்டம்:
மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விபத்து மற்றும் இறப்பு காலத்தில் உதவும் விதமாக விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய 2 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் இணைவதன் மூலம் ரூ.4 லட்சம் வரை பெற முடியும். அந்த வகையில் விபத்து காப்பீட்டில் இணைவது மூலம் ஆண்டிற்கு ரூ.12 செலுத்த வேண்டும். இதன் மூலம் விபத்து நேரும் போது ரூ.2 லட்சம் வரை பெற முடியும்.
15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் – அமைச்சர் உறுதி!!
அதாவது விபத்தினால் இறப்பு என்பது சாலை விபத்து மட்டுமல்ல, பாம்பு கடித்து இறந்தாலும் விபத்துதான், படியில் தவறி விழுந்து இறந்தாலும் விபத்துதான். மேலும் விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்க்கும் இழப்பீடு வழங்கப்படும். ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் எப்படி இறந்து போனாலும் இழப்பீடு உண்டு. பாலிசியில் சேர்ந்த முதல் ஆண்டில் மட்டும் தற்கொலை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆயுள் காப்பீட்டிற்கு ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண்டும். ஒருவர் இரண்டு பாலிசியும் எடுத்து ரூ.342 செலுத்தலாம்.
அவ்வாறு இல்லையெனில் ஒருவர் ஏதாவது ஒரு திட்டத்தில் மட்டும் கூட இணைந்துகொள்ளலாம். விபத்து காப்பீட்டில் 17 முதல் 70 வயது வரையிலும், ஆயுள் காப்பீட்டில் 18 முதல் 50 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலாரும் சேரலாம். ஆயுள் காப்பீட்டை தொடர நினைத்தால் 55 வயது வரை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த திட்டம் வங்கி மற்றும் அஞ்சல் துறையின் மூலம் மட்டுமே தொடர முடியும். இந்த காப்பீட்டை PMJDY திட்டத்தின் 0 பேலன்ஸ் மூலம் வங்கி கணக்கு தொடர்ந்து அதன் மூலம் தொடரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் காலம் ஜீன்.1ம் தேதி முதல் மே.31ம் தேதி வரை ஆகும்.